கோவை சுற்றுலாத்துறையுடன் இணைந்து கல்லூரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து கொண்டாடிய உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது.
கோவை: இன்றைய இயந்திர உலகத்தில் ஓயாதப் பணிகளுக்கிடையே நம்மை ரிலாக்ஸ் செய்வது சுற்றுலா என்று தான் கூற வேண்டும்.
சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்றாலே ஒரு வித குஷியோடு கிளம்பிச்செல்வது இயல்பான ஒன்று. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இதுக்குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலாத்தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கோவையைப் பொறுத்தவரை உலக சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகி சிலை மற்றும் ஈஷா மையத்தினைச்சுற்றிப்பார்க்க கோவை மாவட்ட சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்தது. இதோடு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டச்சுற்றுலாத்துறை சார்பாக ஸ்கால் கிளப்(SKAL CLUB), SIHRA, TAAC கோவை அரசு கலைக் கல்லூரி, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் இணைந்து உலக சுற்றுலாத் தினத்தை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது.

இதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் முதியவர்களுக்கு இலவச சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தது. மேலும் தூய்மைப் பணி, மரம் நடுதல், ரத்த தான முகாம், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, பொதுமக்களுக்கு குறும்படப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, சுற்றுலா விழிப்புணர்வுக்கான சைக்கிள் பேரணி, சுற்றுலா பற்றியக் கருத்தரங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா ஆர்வலராக இணையும் நிகழ்ச்சி போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்றாலே ஒரு வித குஷியோடு கிளம்பிச்செல்வது இயல்பான ஒன்று. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இதுக்குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலாத்தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கோவையைப் பொறுத்தவரை உலக சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற முதியோர்கள் ஆதியோகி சிலை மற்றும் ஈஷா மையத்தினைச்சுற்றிப்பார்க்க கோவை மாவட்ட சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்தது. இதோடு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டச்சுற்றுலாத்துறை சார்பாக ஸ்கால் கிளப்(SKAL CLUB), SIHRA, TAAC கோவை அரசு கலைக் கல்லூரி, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் இணைந்து உலக சுற்றுலாத் தினத்தை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது.
இதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் முதியவர்களுக்கு இலவச சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தது. மேலும் தூய்மைப் பணி, மரம் நடுதல், ரத்த தான முகாம், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, பொதுமக்களுக்கு குறும்படப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, சுற்றுலா விழிப்புணர்வுக்கான சைக்கிள் பேரணி, சுற்றுலா பற்றியக் கருத்தரங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா ஆர்வலராக இணையும் நிகழ்ச்சி போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.