போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு முருகம்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் அவினாசி சாலை, குமார் நகர் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
இதையடுத்து, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு முருகம்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் அவினாசி சாலை, குமார் நகர் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
இதையடுத்து, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.