திருப்பூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு முருகம்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.



இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் அவினாசி சாலை, குமார் நகர் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

இதையடுத்து, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...