வனத்துறை மேம்பாட்டிற்கான நிதியை அதிமுக பெறவில்லை; மத்திய அரசிடம் தற்போது திமுக அரசு ரூ.2ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளது - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்!

வனத்துறை மேம்பாட்டிற்கான நிதியை முந்தைய அதிமுக அரசு பெறாததன் விளைவாக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே தற்போது மத்திய அரசிடம் ரூபாய் 2 ஆயிரம் கோடி நிதியைக்கேட்டுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவையில் தெரிவித்துள்ளார்.



கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், வேளாண் துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட 5 துறைகளின் கீழ் 21 பயனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.



இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கொரோனா தொற்றின் தாக்கம் அதிவேமாக இருந்த நிலையில் தான் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றது.



இருந்தப்போதும் தமிழக அரசு, மருத்துவமனைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் போன்றவை வழங்க துரிதநடவடிக்கை எடுத்ததன் விளைவு தான் தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில், மருத்துவத்துறையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினைச் செயல்படுத்தினார். தற்போது இதன் மூலம் பல லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். இதோடு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கொண்டு வந்த வருமுன் காப்போம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்ததோடு, ஏறக்குறைய 1500 முகாம்கள் நடத்தி எல்லாப் பகுதிகளிலுமே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்திவருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக அனைத்துப் பாதுகாப்பான முன்னேற்பாடுகளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அமைச்சர், வனத்துறையில் உள்ள வேட்டைத தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர நியமன பணி ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதற்கான நிதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் நிதியை பெறாமல் விட்டு விட்டதாகவும் தற்போது திமுக தலைமையிலான அரசு ஒன்றிய அரசிடம் பசுமை திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி நிதி வழங்கிட கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...