வழக்கினை விசாரித்த நீதிபதி, நிரந்தர முடக்கம் செய்து பொது ஏலத்தில் விட, மாவட்ட வருவாய்த் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
கோவை: மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட, கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை, டாடாபாத்தில் செயல்பட்டு வந்த சீனிவாச பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 2008 வரை 654 பேரிடம், 4.22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன பங்குதாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன், விஜயராகவன், சித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில், நிதி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட டாடாபாத்திலுள்ள 5,200 சதுர அடி கட்டடம் அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்டது.
இந்த சொத்தை நிரந்தர முடக்கம் செய்து, பொது ஏலத்தில் விட அனுமதி கோரி, அரசு தரப்பு வக்கீல் மாணிக்கராஜ் மனு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நிரந்தர முடக்கம் செய்து பொது ஏலத்தில் விட, மாவட்ட வருவாய்த் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.
கோவை, டாடாபாத்தில் செயல்பட்டு வந்த சீனிவாச பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 2008 வரை 654 பேரிடம், 4.22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன பங்குதாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன், விஜயராகவன், சித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில், நிதி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட டாடாபாத்திலுள்ள 5,200 சதுர அடி கட்டடம் அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்டது.
இந்த சொத்தை நிரந்தர முடக்கம் செய்து, பொது ஏலத்தில் விட அனுமதி கோரி, அரசு தரப்பு வக்கீல் மாணிக்கராஜ் மனு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நிரந்தர முடக்கம் செய்து பொது ஏலத்தில் விட, மாவட்ட வருவாய்த் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.