கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, ஜான்பாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கொலை மிரட்டல் விடுக்கச் சொன்னது அவர்தான் என கைதான 7 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை.
கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்த தீபக் அரோரா, இவர் சரவணம்பட்டி பகுதியில் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜெயராஜ் உட்பட 7 பேர் சென்று உடனடியாக இடத்தை காலி பண்ணவேண்டும் என அவரை மிரட்டியதாக, தீபக் அரோரா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்து, 7 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தான் இந்த இடத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாங்கி விட்டதாகவும், அந்த இடத்தில் இருக்கும் நபரை காலி செய்து தருமாறு கூறியதை அடுத்து, நாங்கள் அங்குச் சென்ற இடத்தை காலி செய்யக் கொலை மிரட்டல் விடுத்து வற்புறுத்தியதாகப் போலீசில் அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.