பயணிகள் யாரும் மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என போக்குவரத்து துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை: வரும் 1ம் தேதி முதல் கோவை காந்திபுரம் சென்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, கூடலூர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊட்டி கூடலூர் பேருந்துகள் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் இரவு நேர பேருந்துகள் அனைத்தும் வரும் 1.10.2021 அன்று முதல் இரவு 10 முதல் காலை 6 மணி வரை கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயம்புத்தூர் பகுதியிலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிகளுக்கு இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் இரவு நேர பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவை மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊட்டி கூடலூர் பேருந்துகள் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் இரவு நேர பேருந்துகள் அனைத்தும் வரும் 1.10.2021 அன்று முதல் இரவு 10 முதல் காலை 6 மணி வரை கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயம்புத்தூர் பகுதியிலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிகளுக்கு இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் இரவு நேர பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.