திருப்பூரில் 8.70 லட்ச ரூபாயில் வீடு கட்டித்தந்தபிறகும், அதன் உரிமையாளர் பணத்தினை தர மறுப்பதாக கட்டுமான நிறுவன உரிமையாளர் மைதிலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் எஸ் ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மைதிலி. இவர் அப்பகுதியில் ஸ்ரீ சாய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிறுவனத்தின் மூலம் அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் பலருக்கு வீடுகளைக் கட்டி தந்த நிலையில் தான், மங்கலம் பகுதியைச்சேர்ந்த சின்னராஜ் மற்றும் ரமணி ஆகியோர் வீடு கட்டித்தரக்கோரி மைதிலியை அணுகியுள்ளனர். அவரும் நம்பிக்கையின் பேரில் வீடு ஒன்றினை ரூபாய் 8.70 லட்சம் செலவில் கட்டித்தந்துள்ளார். ஆனால் இதுவரை இதற்கான பணத்தை சின்னராஜ் மற்றும் ரமணி ஆகியோர் கொடுக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் இதுக்குறித்து மைதிலி மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை அந்தப்புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து தான், இன்று கட்டிட நிறுவன உரிமையாளரான மைதிலி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில் வீடுகட்டி தரச் சொல்லி பணத்தை ஏமாற்றிய சின்னராஜ் மற்றும் ரமணி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் மோசடி செய்தவர்களை கைது செய்ய வேண்டுமெனவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் மூலம் அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் பலருக்கு வீடுகளைக் கட்டி தந்த நிலையில் தான், மங்கலம் பகுதியைச்சேர்ந்த சின்னராஜ் மற்றும் ரமணி ஆகியோர் வீடு கட்டித்தரக்கோரி மைதிலியை அணுகியுள்ளனர். அவரும் நம்பிக்கையின் பேரில் வீடு ஒன்றினை ரூபாய் 8.70 லட்சம் செலவில் கட்டித்தந்துள்ளார். ஆனால் இதுவரை இதற்கான பணத்தை சின்னராஜ் மற்றும் ரமணி ஆகியோர் கொடுக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் இதுக்குறித்து மைதிலி மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை அந்தப்புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து தான், இன்று கட்டிட நிறுவன உரிமையாளரான மைதிலி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில் வீடுகட்டி தரச் சொல்லி பணத்தை ஏமாற்றிய சின்னராஜ் மற்றும் ரமணி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் மோசடி செய்தவர்களை கைது செய்ய வேண்டுமெனவும் எனவும் தெரிவித்துள்ளார்.