கோவை ஆர்.எஸ்.புரத்தில் மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் பணி 99 சதவீதம் நிறைவு..! விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்!

அனைத்தும் சென்சார் அடிப்படையில் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கோவை ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் உள்பட 4 இடங்களில் மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் மாநகராட்சி சார்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது.



இதில் முதற்கட்டமாக ரூ.42 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் துவங்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடி செலவில் 370 கார்கள் நிறுத்தும் வகையில் 4 அடுக்கு கொண்ட மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு அனைத்தும் சென்சார் அடிப்படையில் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக நவீன ஹைட்லாலிக்ஸ் இயந்திரம் பொருத்தப்படுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....