கோவையில் தடையை மீறி செங்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்..!

உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியை இயக்கி வந்த ஓட்டுநரை கைது செய்த போலீசார், அந்த வாகனத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.



கோவை: கோவை தடாகம் சாலை பகுதியில் சட்டவிரோதமாக செங்கல் ஏற்றி வந்த லாரியினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் சாலை, அடுத்த கணுவாய் பகுதியில், தடாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜான் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக அந்த பகுதியில் வந்த (TN38AL9852) லாரியினை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது சட்டவிரோதமாக செங்கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, லாரியை பறிமுதல் செய்த தடாகம் காவல்துறையினர் லாரியை ஓட்டி வந்த கார்த்திகேயன் (40), என்பவரை கைது செய்தனர்.

மேலும், தற்பொழுது செங்கல் சூளைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட லாரியினையும், அதனை இயக்கிய ஓட்டுநரையும், கைது செய்த காவல்துறையினர் அந்த வாகனத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர். மேலும், லாரி ஓட்டுநரை தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....