கோவையில் போதையில் ரயிலுக்கு அடியில் படுத்து தூங்கிய வாலிபர்..! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

காரமடை அருகே சென்ற மேட்டுப்பாளையம்- கோவை தினசரி பயணிகள் ரயில் தண்டவாளத்தில் குடி போதையில் தூங்கிய வாலிபரை, இரயில் கடந்து சென்றும் காயமின்றி மீட்கப்பட்டார்.


கோவை: கோவை, துடியலூர் அருகே போதையில் ரயிலுக்கு அடியில் படுத்து தூங்கிய வாலிபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம்போல கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது.

அப்போது, துடியலூர் அருகே சென்ற போது, வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் குடி போதையில் உருண்டு கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த என்ஜின் டிரைவர், தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இருப்பினும், அந்த வாலிபர் எழுந்து செல்லாதால், வேறு வழியின்றி பிரேக் அடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளார். இருந்த போதும், அந்த நபர் படுத்திருந்த இடத்தை தாண்டியே இரயில் நின்றுள்ளது.



திடீரென இரயில் நிறுத்தப்பட்டதால், ரயிலில் இருந்த பயணிகள் இறங்கிச் சென்று பார்த்த போது ரயிலின் ஐந்தாவது பெட்டிக்குக் கீழ் உள்ள தண்டவாளத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.



இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள், அவரை ரயிலில் அடியில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால், அந்த வாலிபர் வெளியே வர மறுத்துள்ளார். பின்னர் பயணிகளின் உதவியுடன் அந்த வாலிபரை 10 நிமிடம் போராடி வெளியே இழுத்து வரப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக இந்த வாலிபருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படாததைப் பார்த்த பயணிகள் அவரை அதிசய பிறவி போல் வியந்து பார்த்தனர். இச்சம்பவத்தால், ரயில் 10 நிமிடம் தாமதமாக மேட்டுப்பாளையம் புறப்பட்டுச் சென்றது.

இதற்கிடையே, அதே ரயிலில் காரமடை அருகே மாடு இன்று அடிபட்டுப் பலத்த காயமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...