கிணத்துக்கடவு அரசம் பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 3-டிப்பர் லாரிகளுக்கு ரூ.1.21 லட்சம் அபராதம்.
கோவை: கிணத்துக்கடவு அரசம் பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த 3-டிப்பர் லாரிகளுக்கு ரூ.1.21 லட்சம் அபராதம் விதித்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் சுரேஷ் ஆகியோர் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாகக் கல்குவாரியிலிருந்து பாறை கல் மற்றும் எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை சோதனையிட்டனர்.
அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்ததை அடுத்து 3 டிப்பர் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அதிக பாரம் ஏற்றி வந்ததாக மூன்று லாரிகளும் ஒரு லட்சத்து 21ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் சுரேஷ் ஆகியோர் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாகக் கல்குவாரியிலிருந்து பாறை கல் மற்றும் எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை சோதனையிட்டனர்.
அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்ததை அடுத்து 3 டிப்பர் லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அதிக பாரம் ஏற்றி வந்ததாக மூன்று லாரிகளும் ஒரு லட்சத்து 21ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதித்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.