அன்னூரில் மலர்ந்துள்ள பிரம்ம கமலம் மலர்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்பதால் மலரை காண மக்கள் ஆர்வம்

சின்னசாமி என்பவர் வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைத்த செடியில், தற்போது பிரம்ம கமலம் பூத்துள்ளது. தெய்வீக மலராக கருதப்படுவதால், மலருக்கு தீபாராதனை எடுத்து பூஜை செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர், சேஷாந்தி நகரைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது வீட்டில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலரான பிரம்ம கமலம் மலர்ந்துள்ளது. அபூர்வமாக கருதப்படும் இந்த மலரை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாகப் பார்த்துச்சென்றனர்.

பிரம்மனின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றுவது போல இந்த பூவின் அமைப்பு தோற்றமளிப்பதால் இதற்கு பிரம்மகமலம் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த மலர் மாலை 7 மணிக்கு மலர தொடங்கி அதிகாலை 4 மணிக்கு வாடிவிடும்.



மே, ஜூன், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் மட்டுமே பூக்கும் இந்த மலரில் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று ஆண்டுகள் முன்பு வைத்த செடியில், தற்போது பூ பூத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நெகிழ்ச்சி பட தெரிவித்தனர் சின்னசாமியின் குடும்பத்தார்.



அதிர்ஷ்ட மற்றும் தெய்வீக மலராக கருதப்படுவதால், பிரம்ம கமலம் மலருக்கு தீப ஆராதனை எடுத்து பூஜை செய்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பலரும் வந்து பிரம்ம கமலம் மலரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...