வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகரில் கக்கன் காலனி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி கால்பந்து மைதானத்தின் சீரமைப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
முழுமையாக முடிக்கப்படாததின் காரணமாக நேற்று பெய்த கன மழையில் தரைப்பகுதி உள்வாங்கி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
உடனடியாக அதைச் சரி செய்யாவிட்டால் அதனை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர் (சுமார் 16-அடி உயரம்) இடிந்து கீழ்ப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மேல் விழுந்து சேதமாக வாய்ப்பு உள்ளது.
மேலும் இப்பகுதி மக்களின் நடைபாதையாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இப்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் சிறு குழந்தைகள் இப்பகுதியில் கால்பந்து விளையாடி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட வால்பாறை நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், கால்பந்து மைதான நடைபாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய வேண்டும்.
ஆபத்தைக் கருத்தில் கொண்டு விரைவாகச் செய்யாவிடில் பேராபத்து ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகரில் கக்கன் காலனி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி கால்பந்து மைதானத்தின் சீரமைப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
முழுமையாக முடிக்கப்படாததின் காரணமாக நேற்று பெய்த கன மழையில் தரைப்பகுதி உள்வாங்கி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
உடனடியாக அதைச் சரி செய்யாவிட்டால் அதனை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர் (சுமார் 16-அடி உயரம்) இடிந்து கீழ்ப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மேல் விழுந்து சேதமாக வாய்ப்பு உள்ளது.
மேலும் இப்பகுதி மக்களின் நடைபாதையாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இப்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் சிறு குழந்தைகள் இப்பகுதியில் கால்பந்து விளையாடி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட வால்பாறை நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், கால்பந்து மைதான நடைபாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய வேண்டும்.
ஆபத்தைக் கருத்தில் கொண்டு விரைவாகச் செய்யாவிடில் பேராபத்து ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.