கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை வட்டாட்சியர்களின் அறிமுக கூட்டம்..!

தேர்தல் பிரிவில் துணை வட்டாட்சியராக வேல்முருகன் என்பவரும், கிணத்துக்கடவு மண்டல துணை வட்டாட்சியராக ராமராஜ் என்பவரும் பொறுப்பேற்றுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் துணை வட்டாட்சியராக வேல்முருகன் என்பவரும், கிணத்துக்கடவு மண்டல துணை வட்டாட்சியராக ராமராஜ் என்பவரும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துணை வட்டாட்சியர்களின் அறிமுக கூட்டம் இன்று தாலுக்கா வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.



கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை வட்டாட்சியர்களை அறிமுகப்படுத்தி வட்டாட்சியர் சசிரேகா பேசினார்.

பின்னர், துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தேர்தல் பணிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட துணை வட்டாட்சியர்கள் கேட்டுக்கொண்டனர்.



இந்த அறிமுகக் கூட்டத்தில், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...