பொள்ளாச்சி- ஜமீன்களத்தூர் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

பொள்ளாச்சியிலிருந்து ஜமீன்களத்தூர் வழித்தடத்தில் நிறுத்தப்பட்டப் பேருந்துகளை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யக்கட்சியின் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதி தான் ஜமீன் களத்தூர். இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.

பெரும்பாலும் இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றாலும் பொள்ளாச்சிக்கு தான் செல்ல வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்ட பொழுது பொள்ளாச்சி – ஜமீன்களத்தூர் வழியாக செல்லும் அரசுப்பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மற்றப்பகுதிகளுக்கெல்லாம் பேருந்து சேவை இயக்கப்படும் நிலையில், இந்த வழித்தடத்தில் இன்னமும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

எனவே இங்கே ஜமீன்களத்தூர் பகுதியில் பேருந்துகள் இல்லாததால் சுமார் 3 கீமீ தொலைவில் உள்ள புரவிபாளையத்திற்கு வந்து பேருந்து சேவையைப் பெற வேண்டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.



எனவே பொள்ளாச்சி – ஜமீன்களத்தூர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட 1N, 18B என்ற எண் கொண்ட பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யக்கட்சியின் சார்பில் பொள்ளாட்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...