கோவை கொண்டையம் பாளையத்தில் 3 குவாரிகள், பச்சாபாளையம், கள்ளம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு குவாரிகள் என மொத்தம் 7 குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 7 கல் குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் சூலூர், மதுக்கரை அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி கற்கள் எடுக்கப்படுவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 122 கல்குவாரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி செயல்பட கனிமவளத் துறையில் அனுமதி மட்டுமின்றி வருவாய்த்துறை, புவியியல் துறை, வேளாண் துறை, உள்பட பல்வேறு துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும்.
கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கொண்டையம் பாளையத்தில் 3 குவாரிகள், பச்சாபாளையம், கள்ளம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு குவாரிகள் என மாவட்டம் முழுவதும் 7 குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமீறல் புகார் வருவாய்த் துறையினருக்கு பரிந்துரை செய்கிறோம். அவர்களும் இது தொடர்பாக கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் குறித்த புகார்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.
கோவை மாவட்டத்தில் சூலூர், மதுக்கரை அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் விதிமுறைகளை மீறி கற்கள் எடுக்கப்படுவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 122 கல்குவாரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்குவாரி செயல்பட கனிமவளத் துறையில் அனுமதி மட்டுமின்றி வருவாய்த்துறை, புவியியல் துறை, வேளாண் துறை, உள்பட பல்வேறு துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும்.
கோவை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கொண்டையம் பாளையத்தில் 3 குவாரிகள், பச்சாபாளையம், கள்ளம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு குவாரிகள் என மாவட்டம் முழுவதும் 7 குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விதிமீறல் புகார் வருவாய்த் துறையினருக்கு பரிந்துரை செய்கிறோம். அவர்களும் இது தொடர்பாக கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் குறித்த புகார்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.