கோவை க.க சாவடி அருகே சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை: கோவை க.க சாவடி அருகே சாலையில் கிடந்த ரூ.20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை, காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கோவை க.க சாவடி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பம்மாள் (60). இவர் நேற்று மதியம் வீட்டிற்கு செல்ல வேலந்தாவளம் சாலையில் வந்து கொண்டிருந்தாக தெரிகிறது.
அப்போது, சாலை ஓரத்தில் செல்போன் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த மூதாட்டி கருப்பம்மாள் அருகே இருந்த க.க சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (24) என்கிற இளைஞரின் செல்போன் என தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இளைஞருக்கு போலீசார் தகவல் அளித்தனர். பின்னர், காவல் நிலையம் வந்த அந்த இளைஞரிடம் மூதாட்டியே நேரடியாக செல்போனை ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து, சாலையில் கிடந்த செல்போனை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை க.க. சாவடி உதவி ஆய்வாளர் சரவணன் பொன்னாடை போற்றி பாராட்டினார். இதேபோல், மூதாட்டியின் செயலுக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.
கோவை க.க சாவடி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பம்மாள் (60). இவர் நேற்று மதியம் வீட்டிற்கு செல்ல வேலந்தாவளம் சாலையில் வந்து கொண்டிருந்தாக தெரிகிறது.
அப்போது, சாலை ஓரத்தில் செல்போன் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த மூதாட்டி கருப்பம்மாள் அருகே இருந்த க.க சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (24) என்கிற இளைஞரின் செல்போன் என தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இளைஞருக்கு போலீசார் தகவல் அளித்தனர். பின்னர், காவல் நிலையம் வந்த அந்த இளைஞரிடம் மூதாட்டியே நேரடியாக செல்போனை ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து, சாலையில் கிடந்த செல்போனை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை க.க. சாவடி உதவி ஆய்வாளர் சரவணன் பொன்னாடை போற்றி பாராட்டினார். இதேபோல், மூதாட்டியின் செயலுக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.