500, 1000 ரூபாய் தடையால் வேலையிழந்த தங்கநகைத் தொழிலாளி தற்கொலை

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால் வேலையில்லாத காரணத்தால் கோவையில் தங்கநகை தொழிலாளி தற்கொலை செய்து உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மா.ந.க வீதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அப்பகுதியில் தங்க சங்கிலிகளை கட்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்தார். இதனிடையே, மத்திய பா.ஜ.க அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து இவரது தொழிலில் கடந்த சில மாதங்களாக தொய்வு ஏற்பட்ட காரணத்தால் முருகானந்தம் மன உளைச்சலுடன் காணப்பட்டதுடன் இதுகுறித்து தனது உறவினர்களிடமும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி ஸ்ரீதேவி குழந்தைகளுடன் ஞாயிறன்று காலையில் வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்தபோது முருகானந்தம் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து முருகானந்தத்தை மீட்டபோது தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வெறைட்டிஹால் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு காரணமாக தற்போது வேலையில்லாத நிலை உள்ளதாகவும், வேலை செய்த கூலி பணத்தை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் முருகானந்தம் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் தங்கநகை உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...