கோவையில் சக்தி சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது பைக் மோதிய விபத்தில், 19 வயதான கட்டிடத்தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்
கோவை: விருதுநகர் மாவட்டம் முதல்நகரைச்சேர்ந்த 19 வயதான சரவணன் என்கிற சப்பானி மாடசாமி கோவையில் தங்கி கட்டிடப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல பணியை முடித்து விட்டு வீடு தனது மோட்டார் சைக்கிளிலில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கோவை சக்தி ரோட்டில் உள்ள டெஷ்டில் மேம்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் மீது பைக் மோதியது. இதனால் பலத்த படுகாயம் அடைந்த சரவணனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியளித்தனர். ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனிக்காமல் இன்று சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுக்குறித்து கோவை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல பணியை முடித்து விட்டு வீடு தனது மோட்டார் சைக்கிளிலில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கோவை சக்தி ரோட்டில் உள்ள டெஷ்டில் மேம்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் மீது பைக் மோதியது. இதனால் பலத்த படுகாயம் அடைந்த சரவணனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியளித்தனர். ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனிக்காமல் இன்று சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுக்குறித்து கோவை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.