கோவை குறிச்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்; கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரிடம் மக்கள் கோரிக்கை மனு..!

கிணத்துக்கடவு தொகுதி, 95 வது வட்டம் திமுக கட்சியின் கொடியேற்று விழா, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் குறைதீர்ப்பு மனுக்களை பெற்றுக்கொண்டார்.



கோவை: கிணத்துக்கடவுத் தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி வடக்குப்பகுதி 95 வது வட்டத்துக்கு உட்பட்ட சில்வர் ஜூப்ளி பகுதியில் திமுக கட்சியின் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.



இதில் பங்கேற்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கலந்துக்கொண்டு திமுக கட்சிக்கொடியை ஏற்றியதோடு அப்பகுதியிலுள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதனையடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளைக்கேட்டறிந்த நிலையில் மக்கள் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாக அவரிடம் புகார் அளித்தனர்.



குறிப்பாக குறிச்சி வடக்கு சில்வர் ஜூப்ளி பகுதியில் வசிக்கும் 60 மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எனவும், பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் இன்னமும் எங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். இதோடு இதுக்குறித்து கோரிக்கை மனுவையும் அப்பகுதி மக்கள் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குறிச்சி வடக்குப்பகுதி பொறுப்பாளர் S.A. காதர்,95வது வட்டக் கழகப் பொறுப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....