ஆதார் மையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். கிணத்துக்கடவில் கூடுதலாக ஒரு ஆதார் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் கூடுதலாக ஒரு ஆதார் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவை மையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் நாளொன்றுக்கு 25-பேருக்கு மட்டுமே ஆதார் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தற்போது நியாயவிலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு நடைமுறையில் இருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பலருக்குக் கைரேகை பதிவு விழுவதில்லை, இதனால் ஆதார் சேவை மையத்தில் கைரேகை அப்டேட் செய்வதற்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

ஆனால் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றுவதால் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஆதார் மையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.
ஆனால் ஆதார் சேவை பணிகள் மந்தமாக நடைபெற்றதால் அங்கிருந்த பெண்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதனால் கிணத்துக்கடவு பகுதியில் கூடுதலாக ஒரு ஆதார் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதார் சேவை மையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் நாளொன்றுக்கு 25-பேருக்கு மட்டுமே ஆதார் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தற்போது நியாயவிலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு நடைமுறையில் இருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பலருக்குக் கைரேகை பதிவு விழுவதில்லை, இதனால் ஆதார் சேவை மையத்தில் கைரேகை அப்டேட் செய்வதற்காக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஆனால் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றுவதால் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் ஆதார் சேவை மையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஆதார் மையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.
ஆனால் ஆதார் சேவை பணிகள் மந்தமாக நடைபெற்றதால் அங்கிருந்த பெண்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதனால் கிணத்துக்கடவு பகுதியில் கூடுதலாக ஒரு ஆதார் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.