வால்பாறை தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை.!!

வால்பாறையில் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் தமிழக அரசு அறிவித்துள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பளம் குறித்தும் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.


வால்பாறை: வால்பாறை தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் தமிழக அரசு அறிவித்துள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பளம் குறித்தும் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியாக 425-ரூபாய் 40-பைசா அறிவித்துள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் முடிவுற்றது.

இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அரசின் புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்வு அரசாணை வெளியிடும் வரை ரூபாய் 395-க்கு இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 01.07.21-முதல் வழங்கப்பட்டு வருகிறது.



இதுபற்றிய ஆலோசனைக் கூட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் நடைபெற்றது. எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அரசு ஆணை பிறப்பிக்கும் வரை சம்பளம் தொடர்பான எந்த ஒரு ஒப்பந்தமும் தோட்ட அதிபர்களுடன் ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தத் திட்டம் இல்லை என்றும் தொழிலாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எல்பிஎஃப் வினோத்குமார், செந்தில், ஐ.என்.டி.யூ.சி.யூ கருப்பையா, ஏஐடியூசி மோகன் ராமகிருஷ்ணன், எல்எல்எப்.கேசவ மருகன், வீரமணி, எச்எம்எஸ்.மாணிக்கம், சிஐடியூ.பரமசிவம், எம்எல்எப் கல்யாணி, தங்கவேல், மாணிக்கம், வர்கீஸ், தர்மராஜ் உட்பட ஏராளமான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...