மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப்போராட்டம்; பொள்ளாட்சி சாலைமறியலில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: மத்திய அரசி மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சியில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தலைமை தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்நிலையில் தீடிரென போராட்டக்காரர்கள் மத்தியப்பேருந்து நிலையம் முன்னதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



போரட்டக்காரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியில் திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள். உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...