ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாகன சோதனையில் அன்னூரில் கணக்கில் வராத 8-லட்ச ரூபாய் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாகன சோதனையில் கணக்கில் வராத 8-லட்ச ரூபாய் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தமிழகத்தில் 8-மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை அன்னூர் பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 8-லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அந்த உரிமையாளரிடம் அந்தப் பணம் குறித்துக் கேட்ட போது அதற்கான தக்க ஆவணம் அவரிடம் கிடையாது.
அதனால் தேர்தல் பறக்கும் படையினர் 8-லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாகனத்தில் பணம் கொண்டு வந்த நபரிடம் இதற்கான முறையான கணக்கு மற்றும் ஆவணத்தைக் காட்டிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறி அனுப்பினர்.
தமிழகத்தில் 8-மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை அன்னூர் பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 8-லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அந்த உரிமையாளரிடம் அந்தப் பணம் குறித்துக் கேட்ட போது அதற்கான தக்க ஆவணம் அவரிடம் கிடையாது.
அதனால் தேர்தல் பறக்கும் படையினர் 8-லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாகனத்தில் பணம் கொண்டு வந்த நபரிடம் இதற்கான முறையான கணக்கு மற்றும் ஆவணத்தைக் காட்டிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறி அனுப்பினர்.