மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.
கோவை: தமிழகத்தில் குலாப் புயல் எதிரொலியாக 6-மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-
தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.
வரும், 29, 30ம் தேதிகளில் மாநிலம் முழுதும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், 13 செ.மீ., மழை பெய்து உள்ளது.
சென்னையில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வங்கக் கடலின் வடக்கு பகுதியில் உருவான, 'குலாப்' புயல், நேற்று இரவு கலிங்க பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு அருகே நகர்ந்தது. இது, நள்ளிரவில் கரை கடந்த பின், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-
தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.
வரும், 29, 30ம் தேதிகளில் மாநிலம் முழுதும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், 13 செ.மீ., மழை பெய்து உள்ளது.
சென்னையில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வங்கக் கடலின் வடக்கு பகுதியில் உருவான, 'குலாப்' புயல், நேற்று இரவு கலிங்க பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு அருகே நகர்ந்தது. இது, நள்ளிரவில் கரை கடந்த பின், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.