தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருப்பூர்: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கத் திருப்பூரில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு பாதுகாப்புடன் நேரடி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிரான மாநாடு அக்டோபர் 3-ஆம் தேதி திருச்சியில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடத்த இருப்பதாகவும், இதில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு பாதுகாப்புடன் நேரடி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிரான மாநாடு அக்டோபர் 3-ஆம் தேதி திருச்சியில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடத்த இருப்பதாகவும், இதில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.