தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம்: திருப்பூரில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்.!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்.


திருப்பூர்: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கத் திருப்பூரில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு பாதுகாப்புடன் நேரடி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு எதிரான மாநாடு அக்டோபர் 3-ஆம் தேதி திருச்சியில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக நடத்த இருப்பதாகவும், இதில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....