பொள்ளாச்சியில் நடைபெற்ற கால் பந்தாட்ட போட்டியில் திருப்பூர் அணிக்கு முதல் பரிசு.!!!

வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 15,000-ரூபாயும் இரண்டாவது பரிசாக 10,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 5,000-ரூபாயும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற்ற கால் பந்தாட்ட போட்டியில் திருப்பூர் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையிலும் கால்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியைஊக்குவிக்கும் விதமாகவும் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஐவர் அணி கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை, முன்னாள் திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் கேரள மாநிலம், கோவை, திருப்பூர், திருச்செங்கோடு, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 36-அணிகள் பங்கேற்று விளையாடினர்.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று பல்லடம்- திருப்பூர் அணியும் மற்றொரு பிரிவில் பாலக்காடு-திருச்சூர் அணியும் மோதியது. இதில் திருப்பூர் மற்றும்திருச்சூர் அணிகள்இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-0 புள்ளி என்ற கோல் கணக்கில் திருச்சூர் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது.

வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 15,000-ரூபாயும் இரண்டாவது பரிசாக 10,000 ரூபாயும்மூன்றாவது பரிசாக 5,000-ரூபாயும் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...