புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி (நாளை) நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோவை: புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி (இன்று) நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட கோவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி கூறியதாவது:
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பினர் வரும் 27ம் தேதி மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப வலியுறுத்தியம், 2020 புதிய மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் இன்று கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ரயில் நிலையங்களில் விவசாயகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பல்வேறு, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறையினர், தொழில் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட கோவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி கூறியதாவது:
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பினர் வரும் 27ம் தேதி மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப வலியுறுத்தியம், 2020 புதிய மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் இன்று கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ரயில் நிலையங்களில் விவசாயகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பல்வேறு, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறையினர், தொழில் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.