கோவையில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணிக்கு நிதி ஒதுக்கீடு.!!

சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில் 10-ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட, ரயில்வே மேம்பாலப் பணிகளை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு திமுக மாவட்ட கழகம் நன்றி தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில் 10-ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட, ரயில்வே மேம்பாலப் பணிகளை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு திமுக மாவட்ட கழகம் நன்றி தெரிவித்துள்ளனர்.



கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில் 10-ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட, ரயில்வே மேம்பாலப் பணிகளை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ .வேலு தெரிவித்தார். இதற்கு மாவட்ட திமுகவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர் ந.கார்த்திக் கூறும்போது:-

2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்த போது தமிழக முதல்வர் இருந்த கலைஞர் கோவை சிங்காநல்லூர் எஸ்.எஸ்.காலனி ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த 10-ஆண்டுகளாக, 2011 - 2021 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் பாஜக அதிமுக ஆட்சிதான் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல போராட்டங்களை நடத்தியும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் என வேறு பல போராட்டங்கள் நடத்தியும் கூட அன்றைக்கிருந்த ஆட்சியாளர்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் திமுக அரசு ஏழாம் தேதியன்று பொறுப்பேற்றதும் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் பொறுப்பினை ஏற்ற 140-தினங்களுக்கு முன் அதாவது மே 7-ஆம் தேதி பொறுப்பேற்றார். 140-நாட்களுக்குள்ளாகக் கடந்த 25-ஆம் தேதி சுமார் 29-கோடியே 37-லட்சத்து 87-ஆயிரத்து 910- கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணையைத் தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இது உண்மையிலேயே அந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய ஒரு சந்தோசத்தை ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அத்தனை பேரும் நேற்று கோவைக்கு வருகை தந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பைச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

இந்த செய்தியை அனைவரும் கேட்டவுடனேயே மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் அங்குள்ள நில உரிமையாளருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் திமுக மாவட்ட கழகம் சார்பில் தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....