கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைப்பெற்ற இரத்ததான முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைப்பெற்ற இரத்ததான முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
செப்டம்பர் 17-பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக உறுதிமொழியை திமுக தலைவர் அறிவித்தார். இதனால் வேலைவாய்ப்பு பெண்கள் முன்னுரிமை தரப்படுகிறது. மேலும், தற்போது பெண்கள் வேலைவாய்ப்பில் 40% உள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.
ஆதிதிராவிட கட்டிடங்களை நாங்கள் ஆய்வு செய்தோம், பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாமலும் இருக்கிறது. இதனால் அதற்கு 25-கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மேலும், ஸ்மார்ட் ஸ்கூல் 112-ஸ்மார்ட் கிளாஸ் மேம்படுத்த உள்ளோம். குறிப்பாகத் திராவிட மாணவர்களுக்கு உதவித்தொகைப் பொருத்தவரை அவரவர்கள் வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்படுகிறது.
கிடைக்காத பட்சத்தில் உடனடியாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இன்று தமிழகம் முழுவதும் 20-ஆயிரம் மையங்களில் 15-லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. மத்திய அரசு தடுப்பூசிகளை அதிகமாகத் தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.