'மக்களைத் தேடி மருத்துவம்' வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் ஆய்வு.!!!

வால்பாறை கேரள எல்லையிலுள்ள மழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் கொரானா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.


வால்பாறை: மக்களைத் தேடி மருத்துவம் வால்பாறை வட்டார பகுதியில் கொரானா தடுப்பூசி மெகா முகாமை வட்டார வளமைய தலைமை மருத்துவர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், சோலையாறு நகர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், ஆழியாறு, அட்டகட்டி, உருளிக்கல், மழுக்கப்பாறை ஆகியசோதனைச் சாவடிகள் பேருந்து நிலையங்களில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில்கொரானா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த முகாமில் கொரானா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரானா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

காலை 7-மணி முதல் இரவு 7-மணி வரை 18-வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரானா தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை கேரள எல்லையிலுள்ள மழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் கொரானா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....