கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க சுழற்சி முறையில் ரோந்து பணி - மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் அதிரடி உத்தரவு

கோவை மாவட்டத்தில் செயல்படும் ரோந்து வாகனங்களை தவிர, கூடுதலாக மூன்று ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை இன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்தினார்.



கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, அதிரடி நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் செயல்படும் ரோந்து வாகனங்களை தவிர, கூடுதலாக மூன்று ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை இன்று (25.09.2021), கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் ரோந்து வாகனம் மூலம் காவல்துறையினர் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த ரோந்து பணி நேரடி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களின் உதவியுடன் செயல்பட உள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....