கோவையில் மசாஜ் சென்டரை தொடர்ந்து, அழகு நிலையத்தில் விபச்சாரம்; 4 பெண்கள் மீட்பு, ஒருவர் கைது

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அழகு நிலையத்தில் விபச்சாரம் செய்து வந்த நபர் கைது. மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.


கோவை: கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் வயது 38. இவருக்கு ராவத்தூர் பிரிவில் சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை, தேனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு அழகு நிலையம் நடத்த வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நவநீதகிருஷ்ணன் அங்கு சென்ற போது, சில வாலிபர்கள், அழகு நிலையத்திற்குள் ரகசியமாக உள்ளே சென்று வருவதைப் பார்த்து சந்தேகம் அடைந்தார். இதனால், அவர் அவர்களிடம் விசாரித்த போது, அந்த அழகு நிலையத்தில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த நவநீதகிருஷ்ணன், இது குறித்து சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடத்துவது தெரியவந்ததையடுத்து, விபச்சாரம் நடத்தி வந்த புரோக்கரான, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் வயது 26 என்பவரை கைது செய்தனர்.

மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயது பெண், திருப்பூரைச் சேர்ந்த 33 வயது பெண், கொல்கத்தாவைச் சேர்ந்த 26 வயது மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த 27 வயது பெண், ஆகிய 4 பெண்களையும் மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கோவையில் தொடர்ந்து மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....