கோவையில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி தாய், மகள் சேர்ந்து ரூ. 8.8 லட்சம், 22 பவுன் நகை நூதன மோசடி - போலீசார் விசாரணை!

வங்கி கணக்கில் இருந்து 8.8 லட்சம் மற்றும் நகை கடன் பெறுவதாக வாங்கிய 22 பவுன் நகை ஆகியவற்றை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 8.8 லட்சம், 22 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் ராஜன் நகரைச் சேர்ந்தவர் கீதா (38), இவர் கோவை காட்டூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை காட்டூர் ராம்நகர் நஞ்சப்பன் தெருவில் எனது பெற்றோர்கள் வசித்து வருகின்றனர். இருவரும் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை பார்க்க வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது எனக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த மேரி மற்றும் அவரது மகள் ஜூலியானா ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர்.

இந்நிலையில், எனது பெற்றோரின் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. அதற்கு மேரி மற்றும் அவரது மகள் வங்கியில் நகைக் கடன் வாங்கி தருவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எனது தாயை வங்கிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், வங்கி கணக்கில் இருந்து ரூ. 8.8 லட்சம் மற்றும் நகை கடன் பெற வாங்கிய 22 பவுன் நகை ஆகியவற்றை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், காட்டூர் போலீசார் ராம்நகர் நஞ்சப்பன் தெருவைச் சேர்ந்த மேரி அவரது மகள் ஜூலியானா ஆகிய இருவர் மீதும் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....