பிரதமர் மீது அவதூறு செய்தி ஒளிபரப்பியதாக கலைஞர் டிவி மீது காவல்துறையில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர் சேகர் புகார்..!

மேலும், பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: பாரத பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான முந்ரா துறைமுகத்திற்கு சமீபத்தில் வந்த சரக்கு கப்பலில் ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நடந்த அதிரடி சோதனையில் ஈரானிலிருந்து வந்த இரண்டு கன்டெய்னர்களில் கடத்திவரப்பட்ட சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இதில் தொடர்புடைய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை சென்னையில் கைது செய்தனர்.

இந்நிலையில், இது குறித்து செய்தி வெளியிட்ட தமிழகத்தை சேர்ந்த கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், போதை பொருள் கடத்தல் சம்பவம் மோடியின் தயவுடன் நடைபெறுவது போல் செய்தி வெளியிட்டது..

இந்த நிலையில், பாரத பிரதமர் மோடி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மேலும், பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....