கோவை, திருப்பூர் விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் அக்டோபர் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கடந்த 2014ம் ஆண்டு முதல் கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படாமல் போன நிலையில், தற்போது உரிய கூலி உயர்வு வழங்க கோரி அரசை வலியுறுத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 2.5 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. கூலிக்கு நெசவு செய்யும் 35 ஆயிரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு முதல், கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படாமல் போன நிலையில், தற்போது உரிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு நேற்று மாலை நடந்தது. இதில், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் சோமனூர் தலைவர் பழனிசாமி, பல்லடம் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், சோமனூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டும் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, பேச்சுவார்த்தை முடிவுகள் எதுவும் எட்டப்படாமல், அக்., 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....