கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்க்குள் ஆம்புலன்ஸ் எரிந்து நாசமாகியது.
கோவை: கோவையின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பிணவறை உள்ளது. சற்றுமுன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பிண அறை உள்ளது. இதில், பிணங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிற்பது வழக்கம். இன்று சரியாக 10 மணி அளவில் திடீரென ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு இரண்டு அரசு அமரர் ஊர்திகள் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.

இரவு நேரம் என்பதால் அந்தப் பகுதிகள் ஆட்கள் யாரும் இல்லாததால், தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிவதைப் பார்த்த சேரன் டவர் பகுதியில் சென்று கொண்டிருந்த நபர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சை அணைத்து உள்ளனர்.

ஆனால், அவர்கள் அங்கு வருவதற்குள்ளாக 2 ஆம்புலன்சும் எரிந்து நாசமாகியது.

அதிலிருந்த, ஓட்டுனர்கள் நிறுத்திவிட்டு அவர்களுடைய அறைக்கு தூங்கச் சென்றதால் இந்த பகுதியில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பிண அறை உள்ளது. இதில், பிணங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நிற்பது வழக்கம். இன்று சரியாக 10 மணி அளவில் திடீரென ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு இரண்டு அரசு அமரர் ஊர்திகள் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.
இரவு நேரம் என்பதால் அந்தப் பகுதிகள் ஆட்கள் யாரும் இல்லாததால், தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிவதைப் பார்த்த சேரன் டவர் பகுதியில் சென்று கொண்டிருந்த நபர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த ஆம்புலன்சை அணைத்து உள்ளனர்.
ஆனால், அவர்கள் அங்கு வருவதற்குள்ளாக 2 ஆம்புலன்சும் எரிந்து நாசமாகியது.
அதிலிருந்த, ஓட்டுனர்கள் நிறுத்திவிட்டு அவர்களுடைய அறைக்கு தூங்கச் சென்றதால் இந்த பகுதியில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.