கோத்தகிரி கோடநாடு கொலை வழக்கு; ஒரே நாளில் 4 பேரிடம் ஐ.ஜி., தலைமையில் விசாரணை..!

சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி மற்றும் கோடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி., கேமரா பொருத்திய தனியார் நிறுவன உரிமையாளர் சுரேஷ், முக்கிய சாட்சியான எஸ்டேட் காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை.


கோவை: கோத்தகிரி கோடநாடு கொலை வழக்கில், ஒரே நாளில் 4 பேரிடம் ஐ.ஜி., தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம், 2017 ஏப்., 24ம் தேதி நடந்தது. காவலாளி ஓம் பகதுார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி மற்றும் கோடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி., கேமரா பொருத்திய தனியார் நிறுவன உரிமையாளர் சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம், நேற்றும் இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது. ஜாமினில் உள்ள, சதீஷன், பிஜின் குட்டி ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம், ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு, நேற்று காலை, 11:30 மணிக்கு துவங்கிய விசாரணை நேற்றிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது,

இந்த வழக்கில் கூடுதல் தகவல் பெற, அரசு சிறப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் தாக்கல் செய்த மனுவை அடுத்து, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் அளித்து வழக்கை, அக்., 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதுவரை, 31 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.

மேலும், முக்கிய சாட்சியான, எஸ்டேட் காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த நேபாளத்திலிருந்து அழைத்து வர உள்ளோம். இது போன்ற பல்வேறு சிரமங்களால், மறு விசாரணைக்கான கால அவகாசத்தை மீண்டும் கேட்க உள்ளோம், என்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....