1.57 லட்சம் ரூபாய் மோசடி செய்த இணையதளம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் படித்து முடித்த பட்டதாரி வாலிபர் ஆன்லைன் மூலமாக தொழில் செய்ய ஆசைப்பட்டு, முதலீடு செய்த பணத்தை பறிகொடுத்த பரிதாபம் நடந்துள்ளது.
கோவை கணபதி, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த, 22 வயது கல்லுாரி மாணவர் ஆன்லைன் மூலம் பணம் முதலீடு செய்து, தொழில் செய்ய திட்டமிட்டார்.
இதனையடுத்து, இணையதளங்களை பார்த்தபோது ஆன்லைன் பொருட்கள் பெயரில், குறிப்பிட்ட அளவு பணம் முதலீடு செய்தால், அதற்கு தினமும் வருமானம் வரும் என்றும், முதலீடு செய்த தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்த மாணவர், நான்கு நாட்களாக ஆன்லைன் பொருட்கள் மீது, பணம் செலுத்தி வந்தார். இதில், அவருக்குக் குறிப்பிட்ட அளவு தொகை கிடைத்து வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் 1.57 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், பல ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி, அந்த இணையதளத்தில், 1.57 லட்சம் ரூபாய் செலுத்தினார். செலுத்திய தொகை மீண்டும் வரவில்லை. பல வழிகளில் முயற்சித்தும் கிடைக்காததால், மாநகர சைபர் க்ரைம் போலீசில் மாணவர் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கணபதி, மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த, 22 வயது கல்லுாரி மாணவர் ஆன்லைன் மூலம் பணம் முதலீடு செய்து, தொழில் செய்ய திட்டமிட்டார்.
இதனையடுத்து, இணையதளங்களை பார்த்தபோது ஆன்லைன் பொருட்கள் பெயரில், குறிப்பிட்ட அளவு பணம் முதலீடு செய்தால், அதற்கு தினமும் வருமானம் வரும் என்றும், முதலீடு செய்த தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்த மாணவர், நான்கு நாட்களாக ஆன்லைன் பொருட்கள் மீது, பணம் செலுத்தி வந்தார். இதில், அவருக்குக் குறிப்பிட்ட அளவு தொகை கிடைத்து வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் 1.57 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், பல ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி, அந்த இணையதளத்தில், 1.57 லட்சம் ரூபாய் செலுத்தினார். செலுத்திய தொகை மீண்டும் வரவில்லை. பல வழிகளில் முயற்சித்தும் கிடைக்காததால், மாநகர சைபர் க்ரைம் போலீசில் மாணவர் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.