பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் - 6வன சரகங்களில் 13 க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் பங்கேற்பு.


பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு என மாமிச உண்ணி, தாவர உண்ணி விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் விலங்கு இடம் பெயர்ந்துள்ளாதா? அதிகரித்து உள்ளாதா? என ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது .

 

அதன்படி இந்தாண்டுக்கான குளிர் கால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலரந்தி, வால்பாறை, மானாம்பள்ளி , உடுமலை, அமராவதி ஆகிய 6 வனசரகங்களில் 124 நேர்கோட்டு பாதையில் 130 க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் தன்னாவாளர்கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துக் கொண்டு கணக்கெடுக்கும் பணியில் நேற்று  காலை 6 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வனசரக பகுதியில் வனசரகர் ரவிசந்திரன் தலைமையில் போத்தமடை, சேத்துமடை, ஆழியார் வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுக்கும் பணியில் முதல் 3 நாட்களுக்கு மாமிச உண்ணிகளும், அடுத்த 3 நாட்களுக்கு தாவர உண்ணிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தபடுகிறது. கணக்கெடுப்பின் போது நேர்கோட்டில் உள்ள வன விலங்குகளின் ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு விலங்கு களின் கால்தடம், எச்சம், நக கீறல்கல் உள்ளிட்டவை மூலம் கணக்கெடுக்கபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த வனப்பகுதியில் உள்ள பினம் தின்னி கழுகுகளும் இதில் கணக்கெடுக்கபடுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லததால் வனப்பகுதியில் தண்ணீர் பற்றக்குறை காரணமாக  பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்துள்ள காரணத்தால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விலங்குகள் தென்படாததால்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...