18 வயதை கடந்த மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கோவை சி.ஐ.டி. கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கல்லூரி மூடப்பட்டது.
கோவை அவினாசி சாலையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒரு மாணவி உள்பட 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கல்லூரியில் படிக்கும் 16 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், கல்லூரி வளாகம், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது,
கோவை மாநகராட்சியில் தினமும் 700 மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 18 வயதை கடந்த மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கல்வி நிலையங்களுக்கு சென்று வர வேண்டும். தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், கைகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள சி.ஐ.டி. கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒரு மாணவி உள்பட 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கல்லூரியில் படிக்கும் 16 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், கல்லூரி வளாகம், வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது,
கோவை மாநகராட்சியில் தினமும் 700 மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 18 வயதை கடந்த மாணவ-மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கல்வி நிலையங்களுக்கு சென்று வர வேண்டும். தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், கைகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.