வால்பாறை தபால் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள மழை நீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை வால்பாறை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கோவை: வால்பாறை நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் தூய்மை பணிகள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி, வால்பாறை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி, வால்பாறையில் உள்ள 21 வார்டுகளிலும் ஒரு நாளைக்கு 4 வார்டுகள் வீதம் 21 வார்டுகளில் உள்ள மழைநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்தப்படுகிறது. மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து உள்ள செடிகளை வெட்டி அகற்றப்பட்டு நீர் வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வால்பாறை தபால் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள மழை நீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை வால்பாறை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சிறப்பு துப்புரவு பணிகள் மூலம் மழைக் காலங்களில் வெள்ளம் நேரங்களிலும் நகருக்குள் கழிவுநீர் தேங்குவது சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கலாம். பொதுமக்களும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் கழிவு நீர் வாய்க்காலில் வீசாமல் மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் தரவேண்டும். இவ்வாறு தருவதன் மூலம் சுகாதாரத்தைப் பேணி காப்பதோடு பெரும் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என்று பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். இந்த பணிகள் நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், சுதாகர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி, வால்பாறை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி, வால்பாறையில் உள்ள 21 வார்டுகளிலும் ஒரு நாளைக்கு 4 வார்டுகள் வீதம் 21 வார்டுகளில் உள்ள மழைநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்தப்படுகிறது. மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து உள்ள செடிகளை வெட்டி அகற்றப்பட்டு நீர் வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வால்பாறை தபால் நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள மழை நீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை வால்பாறை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சிறப்பு துப்புரவு பணிகள் மூலம் மழைக் காலங்களில் வெள்ளம் நேரங்களிலும் நகருக்குள் கழிவுநீர் தேங்குவது சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்கலாம். பொதுமக்களும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் கழிவு நீர் வாய்க்காலில் வீசாமல் மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் தரவேண்டும். இவ்வாறு தருவதன் மூலம் சுகாதாரத்தைப் பேணி காப்பதோடு பெரும் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என்று பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். இந்த பணிகள் நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், சுதாகர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.