கோவையில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சசிகுமாரின் நினைவு தினத்தை இந்து அமைப்புகள் அனுசரித்து வருகின்றனர்.
கோவை: கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி, இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்த சி.சசிகுமார் என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கோவையில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சசிகுமாரின் நினைவு தினத்தை இந்து அமைப்புகள் அனுசரித்து வருகின்றனர்.
அதன் படி, இன்று சசிகுமாரின் நான்காம் 4 ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இன்று காலை முதல் கோவையில் உள்ள அனைத்து இந்து முன்னணி கொடிக்கம்பங்கள் முன்பும் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து நினைவுஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது 250 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைப்பெற்றது.
இன்று மாலை, கோவை வி.கே.மேனன் சாலையில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

கட்சியின் மாவட்டத் தலைவர் தசரதன் முன்னிலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில், இந்து முன்னணி வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்துக்களை கிளப்பி விட்டு கலவரம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் போன்ற நிலைமை இங்கும் வரும். பங்களாதேச இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நாடு கடத்த வேண்டும்.

சட்டவிரோதமாக திறக்கப்பட்ட பள்ளி வாசல்களில் தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கின்றனர். காவல்துறை இந்த அரசாங்கத்திற்குப் பணிந்து செல்கிறது. ஆளுநர் உளவு துறையை சேர்ந்தவர். ஆகவே, அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
கோவையில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சசிகுமாரின் நினைவு தினத்தை இந்து அமைப்புகள் அனுசரித்து வருகின்றனர்.
அதன் படி, இன்று சசிகுமாரின் நான்காம் 4 ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இன்று காலை முதல் கோவையில் உள்ள அனைத்து இந்து முன்னணி கொடிக்கம்பங்கள் முன்பும் சசிகுமாரின் திருவுருவப்படம் வைத்து நினைவுஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது 250 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று நடைப்பெற்றது.
இன்று மாலை, கோவை வி.கே.மேனன் சாலையில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கட்சியின் மாவட்டத் தலைவர் தசரதன் முன்னிலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில், இந்து முன்னணி வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்துக்களை கிளப்பி விட்டு கலவரம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் போன்ற நிலைமை இங்கும் வரும். பங்களாதேச இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை நாடு கடத்த வேண்டும்.
சட்டவிரோதமாக திறக்கப்பட்ட பள்ளி வாசல்களில் தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கின்றனர். காவல்துறை இந்த அரசாங்கத்திற்குப் பணிந்து செல்கிறது. ஆளுநர் உளவு துறையை சேர்ந்தவர். ஆகவே, அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.