'சிம்பிளிசிட்டி' செய்தி எதிரொலி: கோவையில் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தைப் போக்க ஜெராக்ஸ் மெஷின்.!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தைப் போக்க ஜெராக்ஸ் மெஷின் 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு சார்பில் வழங்கப்படுவதுடன் அதை இயக்கவும், பராமரிக்கவும் உதவி செய்யப்படும்.



கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தைப் போக்க ஜெராக்ஸ் மெஷின் 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு சார்பில் வழங்கப்படுவதுடன் அதை இயக்கவும் பராமரிக்கவும் உதவி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் ஜெராக்ஸ் மற்றும் போட்டோ எடுக்க முடியாமல் தவிப்பது குறித்தும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அருகே வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்தி ஊடகத்தில் நேற்று புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்(CVC)என்ற நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர். சி.எம்.ஜெயராமன் கூறுகையில்,

"மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் குறை தீர்க்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஜெராக்ஸ் மற்றும் போட்டோ எடுக்கும் வசதி இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவது குறித்து சிம்பிளிசிட்டி ஆன்லைன் ஊடகத்தில் நேற்று வெளியான செய்தி மூலம் தெரியவந்தது.

எங்கள் அமைப்பு சார்பில் உடனடியாக கோனிகா(Konica) ஜெராக்ஸ் மெஷின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு வழங்க தயாராக உள்ளது.

இது மட்டுமன்றி அந்த மெஷினை இயக்க ஒரு நபரை பணிக்கு நியமிக்கவும், அந்த மெஷின் பழுதானால் அதை சரி செய்ய ஆகும் செலவை எங்கள் அமைப்பு சார்பில் ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளோம்.

இதுகுறித்து நாளை ஆட்சியர் சமீரன் அவர்களை நேரில் சந்தித்து மெஷினை வழங்க முடிவு செய்துள்ளோம். சமூக அக்கறையுடன் இந்த செய்தியை வெளியிட்ட சிம்பிளிசிட்டி ஆன்லைன் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...