பொள்ளாச்சி அருகே கிராவல் மண் கடத்திய 3-டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே கிராவல் மண் கடத்திய 3-டிராக்டர்கள், பொக்லைன் இயந்திரத்தை காவல்துறை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள கோபால்பதி சாலையில் ஆழியாறு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, டிராக்டர்களில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, கிராவல் மண் எடுத்துச் சென்ற மூன்று டிரக்டர்கள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை ஆழியாறு காவல்துறை பறிமுதல் செய்தனர்.
மேலும் கிராவல் மண் கடத்தியதாகப் பூபாலன், தமிழரசன், பழனிசாமி, கிருஷ்ணகுமார், முருகன் ஆகிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள கோபால்பதி சாலையில் ஆழியாறு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, டிராக்டர்களில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, கிராவல் மண் எடுத்துச் சென்ற மூன்று டிரக்டர்கள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை ஆழியாறு காவல்துறை பறிமுதல் செய்தனர்.
மேலும் கிராவல் மண் கடத்தியதாகப் பூபாலன், தமிழரசன், பழனிசாமி, கிருஷ்ணகுமார், முருகன் ஆகிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.