கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தையில் முன்னறிவிப்பின்றி சுங்க கட்டணம் உயர்த்தியதை கண்டித்து மாவட்ட வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாவட்ட வியாபாரிகள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தையில் முன்னறிவிப்பின்றி சுங்க கட்டணம் உயர்த்தியதை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகோவில் பகுதியிலுள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது. இதில் சுமார் 114 கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிறு மற்றும் பெரு வணிகர்கள் 150 பேர் இச்சந்தையில் செயல்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தப்படி ஒப்பந்ததாரர் நிர்ணயிக்கப்படுவர்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாகனங்கள் மற்றும் காய்கறி மூட்டைகளுக்கான சுங்க கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை சிறிதும் எதிர்ப்பாரத வியாபாரிகள், இதனை கண்டிக்கும் விதமாக இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டு, காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளரான நாராயணன் கூறியதாவது:
மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் செல்வம் சில அரசு அதிகாரிகளின் துணையுடன் விதிமுறைக்கு மாறாக அனைத்து வகையிலும் கூடுதல் கட்டணம் வசூலித்து மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்துவதாகவும், ஆண்டுக்கு சுமார் 30 முதல் நாற்பது லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டினார்.
அதேபோல, காய்கறி மூட்டைகள் ஒவ்வொன்றிற்கும் 1 ரூபாய் 50 பைசாவென்று நீர்னியத்திருந்த நிலையில், கட்டணத்தை திடீரென 6 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளதாகவும் இரு சக்கர வாகனம் முதல் பத்து சக்கர லாரிகள் வரை அனைத்து வாகனங்களுக்கும் மூன்று மடங்கு சுங்க கட்டணத்தை உயர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், கடந்த முறையை விட 40 லட்சம் ரூபாய் குறைவாக ஒப்பந்தம் பெற்று பல மடங்கு அதிக கட்டணம் வசூல் செய்து மிகப்பெறும் மோசடியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகோவில் பகுதியிலுள்ள எம்ஜிஆர் காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றது. இதில் சுமார் 114 கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிறு மற்றும் பெரு வணிகர்கள் 150 பேர் இச்சந்தையில் செயல்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தப்படி ஒப்பந்ததாரர் நிர்ணயிக்கப்படுவர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாகனங்கள் மற்றும் காய்கறி மூட்டைகளுக்கான சுங்க கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதை சிறிதும் எதிர்ப்பாரத வியாபாரிகள், இதனை கண்டிக்கும் விதமாக இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டு, காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளரான நாராயணன் கூறியதாவது:
மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் செல்வம் சில அரசு அதிகாரிகளின் துணையுடன் விதிமுறைக்கு மாறாக அனைத்து வகையிலும் கூடுதல் கட்டணம் வசூலித்து மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்துவதாகவும், ஆண்டுக்கு சுமார் 30 முதல் நாற்பது லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டினார்.
அதேபோல, காய்கறி மூட்டைகள் ஒவ்வொன்றிற்கும் 1 ரூபாய் 50 பைசாவென்று நீர்னியத்திருந்த நிலையில், கட்டணத்தை திடீரென 6 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளதாகவும் இரு சக்கர வாகனம் முதல் பத்து சக்கர லாரிகள் வரை அனைத்து வாகனங்களுக்கும் மூன்று மடங்கு சுங்க கட்டணத்தை உயர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், கடந்த முறையை விட 40 லட்சம் ரூபாய் குறைவாக ஒப்பந்தம் பெற்று பல மடங்கு அதிக கட்டணம் வசூல் செய்து மிகப்பெறும் மோசடியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.