வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பொறுப்பேற்றிருக்கும் நவரத்தின ராஜா அவர்களுக்கு வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பொறுப்பேற்றிருக்கும் நவரத்தின ராஜா அவர்களை பாராட்டும் விதமாக வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பாக இன்று அரசு மருத்துவமனையில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகிகள் பேசுகையில், புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நமது அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் நவரத்தின ராஜா அவர்கள் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், அவர் சமீப காலங்களில் வால்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நோயாளிகளை தனது சிறப்பான பணியால் வால்பாறை அரசு மருத்துவமனையிலேயே அந்த நோயாளிகளுக்கு திறமையாக அறுவை சிகிச்சை செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்.
மேலும், அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராகப் பொறுப்பேற்றிருப்பது வால்பாறை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இதை பாராட்டும் விதமாக வால்பாறை மக்கள் இயக்கம் சார்பாக அவரது சேவை மேலும் தொடர பாராட்டு விழா நடைபெற்றதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பொறுப்பேற்றிருக்கும் நவரத்தின ராஜா அவர்களை பாராட்டும் விதமாக வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பாக இன்று அரசு மருத்துவமனையில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகிகள் பேசுகையில், புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நமது அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் நவரத்தின ராஜா அவர்கள் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், அவர் சமீப காலங்களில் வால்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நோயாளிகளை தனது சிறப்பான பணியால் வால்பாறை அரசு மருத்துவமனையிலேயே அந்த நோயாளிகளுக்கு திறமையாக அறுவை சிகிச்சை செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்.
மேலும், அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவராகப் பொறுப்பேற்றிருப்பது வால்பாறை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். இதை பாராட்டும் விதமாக வால்பாறை மக்கள் இயக்கம் சார்பாக அவரது சேவை மேலும் தொடர பாராட்டு விழா நடைபெற்றதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.