ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கு; பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு..!

ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2.76 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


கோவை: ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செயல்பட்டு வந்த ஆன்லைன் நிதி நிறுவனம், டிபாசிட் தொகைக்கு இரட்டிப்பு தொகை தருவதாக விளம்பரப்படுத்தினர். இதை நம்பி, 86 பேர் பேர் 4.96 கோடி டிபாசிட் செய்தனர்.

ஆனால், டிபாசிட் பணத்தை திருப்பி தராமல், மோசடி செய்ததால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். நிறுவன பங்குதாரர்கள், திண்டுக்கல் சின்னாளபட்டியை சேர்ந்த ராஜா (36), ஓசூரைச் சேர்ந்த புகழேந்தி ஆகியோர் 2010 -ல் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இவர்கள் மீது கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. புகழேந்திக்கு, கடந்த ஜூன் 31ம் தேதி 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு, 10 ஆண்டு சிறை, 2.76 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...