கோவையில் கஞ்சா வியாபாரியை கைது செய்த காவலருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு.!!

தனியாகச் சென்று கஞ்சா வியாபாரியைக் கைது செய்த காவலருக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு சான்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



கோவை: தனியாகச் சென்று கஞ்சா வியாபாரியைக் கைது செய்த காவலருக்கு மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு சான்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய ரோந்து காவலர் குப்பமுத்து என்பவர் நேற்று (20.09.2021) செங்க துறை அருகில் நொய்யல் ஆறு பாலத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மணிகண்டன் என்பவரைக் காவல்நிலையம் அழைத்து வந்து காவல் ஆய்வாளர் மாதையன் வசம் ஒப்படைத்தார்.

இது சம்பந்தமாகக் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து மணிகண்டனைச் சிறையில் அடைத்தார்.

இவ்வழக்கில் குற்றவாளியை பிடிக்கத் திறம்படச் செயல்பட்ட ரோந்து காவலர் குப்பமுத்து என்பவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இன்று (21.09.2021) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...