கோவையில் 1-லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி அலுவலர் கையும் களவுமாக கைது.!!

ஆண்டறிக்கையில் தணிக்கையாளர் செய்த தவறு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க 1-லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி அலுவலர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கோவையில் பரபரப்பு.


கோவை: கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகி தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தை அணுகித் தான் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், நிறுவனத்தின் மீது 2014 /2015 ஆம் ஆண்டு அறிக்கையில் தணிக்கையாளர் செய்த தவறு தொடர்பாக வணிகவரித் துறை தன் நிறுவனத்தின் மீது ரூபாய் 15 லட்சத்து 73 ஆயிரத்து 192 அபராதம் விதிக்காமல் இருக்க விவேகானந்தன் வணிகவரி அலுவலர் ஆவாரம் பாளையம் தாலுகா கோயம்புத்தூரைச் சேர்ந்த அவர் தனக்கு 1 லட்சம் லஞ்சம் முன் பணமாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டதாகவும், அதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அவரிடம் 1 லட்ச ரூபாய் கொடுத்து அதிகாரிகளுடன் சென்றனர். புகார்தாரர் விவேகானந்தரிடம் 1 லட்சம் கொடுக்கும்பொழுது லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...